Friday, November 27, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 17

 திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.


பொருள்:

கடலிலிருந்து நீரை எடுத்துகொண்ட மேகம் அந்த நீரை மழையாகப் பெய்யாமல் போனால், பரந்த கடல் கூடத் தன் நீர் வளத்தை இழந்து விடும்.


கதை:

ராஜ் உனக்கு இந்த ஊர் பிடிச்சு இருக்குதா?.

ரொம்ப பிடிச்சு இருக்கு டாடி.

ஸ்கூல்லாம் எப்படி இருக்கு?

டாடி, இங்க ஸ்கூல் Couching different ஆ இருக்கு. போக போக Set ஆகிடும்னு நினைக்குறேன்.

Very good. Miss class எப்படி எடுக்குறாங்க.

ரொம்ப பிடிச்சுருக்கு டாடி. இன்னிக்குக் கிளாசுலே மழை எப்படிப் பெய்யுதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க" என்றான் ராஜ்.

"Interesting, உனக்கு புரிஞ்சது சொல்லு. பார்ப்போம்." என்றார் மகனிடம், ஆவலை வெளிக்காட்டி.

"வெய்யில் அடிக்குது இல்ல, அந்த சூட்டுல கடல் தண்ணி எல்லாம் ஆவியாகி மேல போயி மேகமா மாறிடும். அந்த மேகம்தான் மழையாப் பெய்யுது" என்று விளக்கினான் ராஜ்.

"வெரி குட்" என்று மகனை வாரி அணைத்துக் கொண்டார் ரணசிங்கம்.

"ஆமாம் நான் ஒரு கேள்வி கேக்கறேன், பதில் சொல்லுவியா?" என்றார் ரணசிங்கம்.

"Of course dad", என்றான் ராஜ்.

"கடலிலே இருந்து நெறையத் தண்ணி ஆவியாப் போயிடுது இல்ல, ஆனா கடல்ல தண்ணி கொறையறதே இல்லையே அது ஏன்?" ரணசிங்கம்.

"ஏன்னா அந்தத் தண்ணி எல்லாம்தான் மழையா கடலுக்கே திரும்பி வந்துடுதே!" என்றான் ராஜ்.

"வெரி குட்" என்றார் ரணசிங்கம்.

"But dad, எனக்கு ஒரு டவுட். ஒரு வேளை ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையா மாறாம அப்படியே மேகமா ஆகாயத்துலேயே இருந்துட்டா என்ன ஆகும்?"

"அப்படி ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையாத் திரும்பி வரலேன்னா கடல்ல தண்ணி குறைஞ்சு, கடைசில கடலே  வத்திப் போனாலும் போயிடும்" என்றான் ரணசிங்கம்.

"அப்படி நடந்துடும்மா டாடி" என்றான் ராஜ்.

"நடக்காது. கவலைப் படாதே. ஆனா நாம ஒண்ணு புரிஞ்சுக்கணும். உலகத்தில எல்லாமே  போயிட்டுப் போயிட்டுத் திரும்பி வரணும். அப்பதான் உலகம் இயங்கும் என்றார் ரணசிங்கம் ஏதோ யோசனையுடன்".

ஒரு வருடங்களுக்கு பிறகு ஊர் பெரியவர் ரணசிங்கத்தின் வயல் பக்கம் சென்ற போது வயல் முழுவதும் பசுமையாக இருந்ததையும் அங்கு சிலர் வேலை செய்ததையும் கண்டு. ஆச்சரியம் அடைந்தார்.

பலே.. சொன்னத செய்துட்டியே. எப்படிப்பா இது சாத்தியம்?.

"ஐயா, ஒருநாள் என் பையன்கிட்ட பேசும் போது தான் எனக்கு ஒன்னு தோனுச்சு. எப்படி கடல் தண்ணீர் மழையா மாறி மறுபடியும் கடல்ல சேருது. அதே மாதிரி தான் நம்ம நிலத்தடி நீர் எடுக்குறோம். ஆனால் மறுபடியும் நிலத்துக்கு கொடுக்குறோம்மா தோணுச்சு.உடனே அதுக்கு என்ன பன்றதுன்னு தேடுனேன். அப்ப தான் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு பற்றி படிச்சேன். என்னோட வீட்லயும்  மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைச்சேன். அதோட என்னோட வயல்ல இருந்த மண்னை வேளாண்மை கூட்டுறவு சங்கம் அமைத்த ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு கொடுத்தேன்.ஆறு மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் கொஞ்சம் உயர்ந்தது. தற்காலிகமா இயற்கை உரங்கள் பயன்படுத்தி தோட்டம் போட்டு பார்த்தோம். அதுதான் நீங்க இப்போ பார்க்குறீங்க.

படிச்சவன் படிச்சவன் தான். நீ சாதிச்சிட்ட தம்பி. நம்ம ஊர்ல இருக்குற எல்லார்கிட்டயும் இத சொல்லுறேன். அவுங்களுக்கும் நீ தான் வழிகாட்டனும்.

கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவி செய்றேன்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



Monday, November 23, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 16

 திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.


பொருள்:

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது.


கதை:

என்னங்க நாம இப்போ ஊருக்கு போய்தான் ஆகனும்மா? கவிதா சிறிது தயக்கத்துடன் கேட்டாள்.

Come on kavi, இப்போ இருக்குற Situation என்னனு உனக்கு நல்லா தெரியும்.

ஆனா நம்ம ஊருல போய் என்ன பண்ண போறோம்?. நீங்க Ac-யில் உட்கார்ந்து System - ல வேலை செஞ்சு பழகிட்டிங்க. அத பத்தி யோசிச்சு பார்த்தீங்களா?.

கையில கொஞ்சம் காசு இருக்கு. ஊர்ல கொஞ்சம் நிலம் இருக்கு. கொஞ்ச நாள் சமாளிக்கலாம் என்றார் ரணசிங்கம்.

என்னதான் Foriegn ல இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வராதுல்ல என்றாள் கவிதா ஜன்னல் ஓரமாக Train இருந்து இயற்கையை ரசித்தபடி.

ம்ம்ம்.. யாரோ ஊருக்கு போகனும்மா கேட்டாங்க என்றார் தொண்டையை செருமியபடி.

ஊரில் இறங்கி சிறிது தூரம் நடந்ததும் ஊர் பெரியவர் ,"யாருப்பா ஊருக்கு புதுசா இருக்கு?" என்றார்.

நான் இந்த ஊர்க்காரன். நான் துபாய்க்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், என் குடும்பத்துல எல்லோரும் வேற ஊருக்குப் போயிட்டாங்க. இப்ப நான் துபாயிலேருந்து திரும்பி வந்திருக்கேன். நானும் வேற ஊர்ல செட்டில் ஆகியிருக்கலாம். இங்க எனக்குக் கொஞ்சம் நெலம் இருக்கறதுனால அதுல தோட்டம் போட்டு ஏதாவது பயிர் செய்யலாம்னு பாக்கறேன்.

"ஏம்ப்பா? இது மானம் பாத்த பூமி. இங்கே மழை பெய்யறதே அபூர்வம். முக்காவாசி பேரு இந்த ஊரை விட்டுப் போயிட்டாங்க. ஏதோ ஊர்ல ரெண்டு மூணு பொதுக்கெணறு இருக்கு. அதுங்கள்ள ஆழத்துல தண்ணி இருக்கு. அதுல தண்ணி ஊறிக்கிட்டு இருக்கு. இந்த ஊர்ல இருக்கறவங்க கொஞ்சம் பேரும் வேற போக்கிடம் இல்லாமதான் இங்க இருக்காங்க.  பக்கத்து டவுனுக்குப் போய் ஏதோ வேலை, வியாபாரம்னு செஞ்சுக்கிட்டு பொழைப்பை நடத்திக்கிட்டிருக்காங்க. இந்த ஊர்ல வந்து தோட்டம் போடப் போறேங்கறியே!" என்று விலாவாரியாகப் பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான் ரணசிங்கம்.

"நீங்களே சொல்றீங்க இல்ல, அடில தண்ணி இருக்குன்னு? நிலத்துல தண்ணி ஊறிக்கிட்டே இருக்கும்னும் சொல்றீங்க! அப்படின்னா ஒரு தடவை போர் போட்டா தண்ணி எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லே? 

அப்படிச் செஞ்சா, இந்த ஊரே மாறிடும். இன்னும் ஒரு வருஷம் கழிச்சுப் பாருங்க இந்த ஊரு எப்படி இருக்கப் போவுதுன்னு!" என்று சொல்லி விடை பெற்றான் ரணசிங்கம்.

'ம்ம். நீ துபாயில சம்பாதிச்சதையெல்லாம் தண்ணியில விடணும்னு விதி இருந்தா அதை யார் தடுக்க முடியும்?' என்று சொல்லிக் கொண்டார் பெரியவர்.

அடுத்த சில நாட்களில் ரணசிங்கம் சுறுசுறுப்பாக வேலைகளைத் தொடங்கினான். முதலில் போர் இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியும், ஆட்களும் வந்து சேர்ந்தனர். 

அடுத்த நாளே பம்ப்செட்டை நிறுவிக் குழாய்களை அமைத்துத் தற்காலிக மின்சார இணைப்பில் மோட்டாரை இயங்கச் செய்தான். குழாயிலிருந்து தண்ணிர் கொட்டியது. சில நிமிடங்களிலேயே தண்ணிர் நின்று விட்டது. மறுபடியும் மோட்டார் போட்ட போது தண்ணீர் வரவில்லை..

"தம்பி, மழை பெஞ்சாத்தான் தண்ணி! மழை பெய்யாத ஊரில இது மாதிரி முயற்சி எல்லாம் வேணாம்னு நான் அப்பவே சொன்னேன். எங்களுக்குத் தெரியாத விவசாயம் நீ செஞ்சுட போறியா?. விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது. இந்த மட்டோடு விட்டுட்டு வேறு வேலையை பாரு?" என்றார் ஊர்ப் பெரியவர்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



Monday, November 2, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 15

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.


பொருள்:

பெய்யாமல் உலக மக்களின் வாழ்க்கையைக் கெடுப்பதும் மழைதான். மழை பொய்த்ததால் வளம் குன்றித் தவிக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பெய்வதும் மழைதான்!


கதை:

நல்லா யோசிச்சு பார்த்தேன் அன்னம். நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இப்படிக் குற்ற உணர்ச்சியோடு அரிசி வாங்கிச் சாப்பிடுவதை விட, நிலத்தை விற்று விட்டால், அரிசி வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆகி விடுமே!

அதான் "அந்த ரியல் எஸ்டேட்காரங்க பார்த்து நிலத்தை விற்க சம்மதம்னு சொல்லிடப் போறேன்." என்றார்.

ம்ம்ம்.. நிலத்தை விற்குறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு தடவை நம்ம நிலத்தை பார்த்துட்டு வருவோம்ய்யா....

சரி போவோம்.. வா..

தரிசாக இருக்கும் நிலத்தை பார்த்து அன்னம் கவலை அடைந்தாள். 

என்னாச்சு பிள்ளை?,  நீதான் நிலத்தை விற்க சொன்ன.

என்னய்யா நீ, நான் மட்டும் சந்தோஷத்தோடவா நிலத்தை விற்க சொன்னேன்...  மூன்று வருஷமா மழை இல்ல. ஆத்துல தண்ணி இல்ல. பம்ப் செட் போட்டுப் பயிர் செய்யறத்துக்கும் நமக்கு வசதி இல்ல. வெவசாயமே இல்லேங்கறப்ப 'நிலத்தை இப்படி தரிசா போட்டு வச்சு இருக்கோம்' ன்னு தான் அப்படி சொன்னேன். இது எனக்கும் சாமிதான்யா. நம்ம பிள்ளைங்க கை குழந்தையா இருக்கும் போது எத்தனை முறை இந்த மரத்துல தொட்டி கட்டி தூங்க வச்சு இருக்கோம். 

இந்த இடத்துல எத்தனையோ நாள் நான் உனக்கு சாப்பாட என் கையால உருண்ட பிடிச்சு கொடுத்து இருக்கேன். அதுலாம் நினைக்கும் போது நான் மட்டும் எப்படி கவலைப்படாம இருக்க முடியும்.

சரியா போச்சு... இம்புட்டு கவலையை மனசுல வச்சுக்கிட்டுத்தான் நிலத்தை விற்க சொன்னியா என்கிட்ட.  நீ கவலைப்படுறத பார்த்தா மூன்று வருஷம் வராத மழையும் வந்துடும் போலயே...

யோவ் கிண்டலா பண்ணுற.. உன்னைய... என்று கூறிக்கொண்டே இருக்கும் போது வானம் இடியுடன் மழை கொட்டத் துவங்கியது.

என்ன மழையோ! மூன்னு வருஷமா பெய்யாம நம்மளை வாட்டி எடுத்துச்சு. இப்ப நல்லாப் பேஞ்சு நம்ம வயித்தில பாலை வாத்திருக்கு!. இன்னும் ரெண்டு நாள் இத மாதிரி மழை பெய்தால் நமக்கு கவலையில்லை என்று சந்தோஷத்தில் கூத்தாடினர் மாரிமுத்துவும் அன்னமும்..


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



Thursday, October 29, 2020

Vehicles தூய தமிழ் வார்த்தை

Vehicles தூய தமிழ் வார்த்தை - ஆண்டிப்பட்டி தாத்தாவும் ஆங்கிலம் பேசும் பேரனும் || episode 1


கதை:

அருள்..அருள்..

மம்மி...I am here...

ஓ... நீ இங்க இருக்கியா... உங்க தாத்தா ஆண்டிப்பட்டியில இருந்து வர்றாங்க...

You mean grandpa....

ஆமா..ஆமா...

Okay..np..Where i have to pick up?...

நீ கொஞ்சம் பேருந்து நிலையம் வர போய் அவங்களை கூட்டிட்டு வா...... 

Mom...எனக்கு புரியுற மாதிரி சொல்லுங்க...

அச்சோ... உன்னைய english medium la சேர்த்துவிட்டது தப்பா போச்சு... உங்க ஸ்கூல்ல டீச்சர் என்னதான் உனக்கு சொல்லிக் தர்றாங்களோ.. இப்போ பாரு தமிழே உனக்குத் தெரியலை.

Mom..I know tamil...Don't blame me and my school... எங்க Schoolல்ல tamilல நான் தான் First mark... but, நீங்க பேசுறது தான் என்ன Language ன்னு தெரியலை...

டேய் நானும் உன்கிட்ட தமிழ்ல தாண்டா பேசுறேன். தாத்தாவை பஸ் ஸ்டாப் க்கு போய் பிக் அப் பன்னிக்க சொன்னேன்.

Yeah... now i got it.நீங்க First bus stop ன்னு சொல்லி இருக்கலாம்.. Starting you told something Different.

Mmmmm.... பேருந்து நிலையம்...

Yeah yeah... the same... intha mathiri difficult words la use பண்ணுறீங்க.

டேய் அதுதாண்டா தூய தமிழ்...

I see.... okay..Na Grandpa va pick up panna poren.

டேய் மிதிவண்டி இல்லாட்டி துள்ளுந்து எடுத்துட்டு போ...

மம்மி பிளீஸ்... Enaku puriyura mathiri solu....

சைக்கிள் or ஸ்கூட்டர் எடுத்துட்டு போன்னு சொன்னேன்.

Motobike ல போய்ட்டு வரேன் மம்மி...

உந்துருளி உனக்கு இன்னும் சரியா ஓட்டத் தெரியாதுடா... நான்

சொல்லுறத கேளு.

ம்ம்ம்.... Okay என்று சொல்லும் போது வாசலில் பேச்சுக்குரல் கேட்டது..

Amma grandpa auto la vanthutanga...

Autoன்னு சொல்லக் கூடாது. அதை மூவுருளி உந்து ன்னு தான் சொல்லனும்..

வாங்க அப்பா... எப்படி இருக்கீங்க. 

நான் நலமாக உள்ளேன். நீ நலமா.. 

மாப்பிள்ளை எங்கே...

அவங்க வேலைக்கு போய் இருக்காங்க.

பிரயானம் எல்லாம் சவுக்கியமா இருந்துச்சா..

ஊரில் இருந்து தொடருந்துல தான் வந்தேன். அங்க இருந்து  மூவுருளி உந்து லயே நம்ம வீட்டுக்கு வந்துட்டேன்.

மூவுருளி உந்து ல காசு கூட கேட்பாங்கப்பா.. நீங்க மகிழுந்து  லயே வந்து இருக்கலாம்...

நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியலை..

மூவுருளி உந்துன்னா Autoதொடருந்துன்னா Train. மகிழுந்துன்னா கார் டா.

யாரும்மா இந்த பையன்.

இவன்தான்ப்பா உங்க பேரன்..

அருள்மொழிவர்மனா இது... அவன் பிறந்த பொழுது பார்த்தது. அதன் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறேன்...

ஆமாப்பா...

அருள்மொழிவர்மா இங்க வாங்க.....

Grandpa என்னைய அருள் ன்னு கூப்பிடுங்க. Full name சொல்லாதீங்க...

அவன் எப்பொழுதும் அப்படித்தான் அப்பா. நீங்கள் சென்று நீராடி விட்டு வாருங்கள். நான் தங்களுக்கு சிற்றுண்டி தயார் செய்கிறேன்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.




திருக்குறள் கதைகள் - குறள் 14

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.


பொருள்:

உழவர்கள் வருவாய் ஈட்ட உதவும்  மழை வளம் குறைந்து விட்டால், உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலைக் கைவிட்டு விடுவார்கள்.


கதை:

கோவிந்தன் இப்போதெல்லாம் அதிகம் பார்ப்பது வானத்தைத்தான். வீட்டுக்கு வராத பிள்ளையை எதிர் நோக்கி ஒரு தாய் அடிக்கடி வாசலில் வந்து நின்று தெருக்கோடியைப் பார்ப்பது போல் அடிக்கடி வானத்தைப் பார்ப்பது கோவிந்தனுக்கு ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டது.

"இப்படியே மானத்தைப் பாத்துக்கிட்டிருந்தீங்கன்னா தலையே மேல திரும்பிடப் போவுது!" என்று அவன் மனைவி அன்னம் சில சமயம் சொன்னாலும் அவனது கவலையில் அவளுக்கும் பங்கு உண்டு. மழை பெய்யாதது அவளையும்தானே பாதித்திருக்கிறது?

"டிவியில மழை வரும்னு ஏதாவது சொன்னாங்களா?" என்றான்  கோவிந்தன், என்ன பதில் வரும் என்று தெரிந்தும்.

"சொன்னாங்க. பம்பாயில கொட்டு கொட்டுன்னு கொட்டுதாம். ஆனா நம்ம ஊருக்கு வர இருந்த புயல் ஆந்திராவுக்குப் போயிடுச்சாம்!" என்றாள் அன்னம் ஆற்றாமையுடன்.

மழை பொய்ப்பது இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டு. விவசாயத்தையே நம்பி இருக்கும் அவனைப் போன்றவர்களுக்கு வானம் பொய்த்து விட்டால் வாழ்க்கையே இல்லையே!

"சாப்பிட வாங்க" என்று மனைவி அழைத்தாள்.

நானே வயலில் உழுது, பயிர் செய்து, அறுவடை செய்த நெல்லில் பெரும்பகுதியை விற்று விட்டு, நமக்கென்று வைத்துக்கொண்ட நெல்லைக் குதிரில் சேமித்து அவ்வப்போது அரிசி மில்லில் அரைத்து அந்த அரிசியில் உண்ட காலம் போய், இப்போ டவுனுக்குப் போய் அரிசிக்கடையில் அரிசி வாங்கி, பேருந்தில் ஊருக்குக் கொண்டு வந்து அந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிடும் கொடுமை வந்துவிட்டது. இதை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. எனக்கு சாப்பாடு வேண்டாம் அன்னம்.

"உங்களுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? நெலத்தைத்தான் ரியல் எஸ்டேட்காரங்க நல்ல வெலைக்குக் கேக்கிறாங்களே? பேசாம நெலத்தை வித்துட்டுப் பணத்தை பாங்கில போட்டுட்டு வர வட்டியில நம்ம ரெண்டு பேரும் காலத்தை ஓட்ட முடியாதா? பையன் வேற கொஞ்சம் பணம் அனுப்பறான் என்றாள் அன்னம்.

"உழவன் நெலத்தை வித்துட்டு வட்டிப் பணத்துல சாப்பிடறதுன்னு ஆரம்பிச்சா உலகம் என்னத்துக்கு ஆகும்?"

"ஆமாம்! நீங்க ஒத்தர்தான் உழவரா? நம்ம ஊரிலேயே வெவசாயம் பண்ணறவங்க எவ்வளவோ பேரு நெலத்தை வித்துட்டு நிம்மதியா இருக்காங்க!"

கோவிந்தன் பேசாமல் இருந்தான்.

மறுநாள் காலை தான் சென்று ரியல் எஸ்டேட்காரங்க பார்க்கப் போறேன்.

எதுக்குங்க?

நல்லா யோசிச்சு பார்த்தேன் அன்னம். நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இப்படிக் குற்ற உணர்ச்சியோடு அரிசி வாங்கிச் சாப்பிடுவதை விட, நிலத்தை விற்று விட்டால், அரிசி வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆகி விடுமே!

அதான் " அந்த ரியல் எஸ்டேட்காரங்க வந்தா நிலத்தை விற்க சம்மதம்னு சொல்லிடப் போறேன்." என்றார்.

அன்னம் நம்ப முடியாமல் தன் கணவனைப் பார்த்தாள்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



திருக்குறள் கதைகள் - குறள் 13

 திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.


பொருள்:

நீர் சூழ்ந்த உலகம் இது  என்றாலும், வானம் பொய்த்து விட்டால், உலகின் உள்ளிருந்து பசிக்கொடுமை (மக்களை) வாட்டும்.


கதை:

அப்பா! அப்பா! என்று ஹரி அழைத்தான்.

என்னப்பா? என்று கேட்டார் அழகேஷன்.

அப்பா எங்க ஸ்கூல்ல நாளைக்கு பேச்சுப் போட்டி இருக்குப்ப. அதுக்கு நானும் பேரு கொடுத்து இருக்கேன் அப்பா. 

நல்ல விசயம் ஹரி. தலைப்பு என்ன?.

தலைப்பு 'மழை' அப்பா.

அருமையான தலைப்பு. 

ஆனால் அப்பா எனக்கு மழை பற்றி அவ்வளவா தெரியாது. நீங்க கொஞ்சம் சொன்னா நான் competition க்கு Prepare பன்ன வசதியா இருக்கும்.

இவ்வளவு தானா? சரி நீ போய் Refresh ஆகிட்டு வா. நம்ம வெளிய போகலாம்.

Okay அப்பா..

After 10 min

அப்பா நாம எங்க போறோம்.

Beach க்கு போறோம்.

ஹய்யா ஜாலி ஜாலி...

Kids playing...

வீட்டுக்குப் போவோமா...

சரிப்பா..

இப்போ நீ பாத்தியே கடல். அந்த இடம் எப்படி இருக்கு ஹரி.

ம்ம்ம்... ஒரு பக்கம் முடிவே இல்லாத கடல். இன்னோரு பக்கம் நிலம்.

கரெக்ட். அதே மாதிரி தான் இந்தியாவும் முன்று பக்கம் நீரால், ஒருபக்கம் நிலத்தால் ஆனது.

எனக்கு இது தெரியும் அப்பா. எங்க ஸ்கூல்ல மிஸ் இது பத்தி சொல்லி இருக்காங்க.

அப்போ உலகத்தில்  நீர் விழுக்காடு தான் அதிகம்ன்னு உனக்கு நல்லாவே தெரியும்ன்னு நினைக்குறேன்.

ஆமாப்பா...மிஸ் சொன்னாங்க.

வெரி குட். ஹரி எவ்வளவு தான் நீரின் அளவு அதிகமா இருந்தாலும் மழை இல்லாட்டி உலகம் முழுவதும் பசியால் வாடும்.

அப்பா நீங்க சொல்லுறது புரிஞ்ச மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு....

ஹரி மழை பெய்தால் தான் அணைகள் நிறையும். ஆறுகளில் தண்ணீர் வரும். விவசாயம் பண்ண முடியும். 

மழை பெய்யாட்டி விவசாயம் பண்ண முடியாது. விவசாயம் பண்ணலைன்னா மக்கள் யாரும் சாப்பிட முடியாது.

ஆனா அப்பா மழை எப்படி பெய்யாமல் போகும்.

மழை பெய்யாமல் போறதுக்கு மனிதன் தான் காரணம்.

என்னப்பா சொல்லுறீங்க?.

ஆமாப்பா.. நம் முன்னோர்கள் காலத்தில் மாதம் மும்மாரி பெய்தது. ஆறுகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள்ன்னு அனைத்தும் நிரம்பி வழிந்தது.நாடும் பச்சை பசேல் என செழிப்பாக இருந்தது.

எங்க அப்பா காலத்துல தண்ணிய ஆறு, குளத்துல பாத்தாங்க. நான் கிணத்துல பார்த்தேன். என்னுடைய பையன் பிளாஸ்டிக் பாட்டில்ல பார்க்கிறான். இனி வர்ற காலத்துல தண்ணிய பார்கிறதே கேள்விக்குறி ஆகிரும் போல.

இதில் இருந்து மீண்டு வர வழியே இல்லையா அப்பா.

மழை பெய்யனும்ன்னா மலைகளும் மரங்களும் தேவை. மனிதன் மரங்களை வெட்டத் துவங்கி இயற்கை வளத்தை அழிக்கின்றான். அதுவே மழை பொய்ப்பதற்க்கு முக்கிய காரணம்.நாம் நிறைய மரங்களை நட்டாக வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும்..



காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.




Friday, October 23, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 12

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.


பொருள்:

உண்பவர்களுக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, அவர்களுக்குத் தானே உணவாகவும் ஆகிறது மழை.


கதை:

ஆஹா.. அம்மா இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு...

ஆமாப்பா... 

அம்மா மழை தான் மரங்களின் வளர்ச்சிக்கும் காரணமா?

ஆமாண்டா அமுதன். மழை பெய்வதனால் தான் தானியங்கள் விளைகின்றன. மேலும் மழை நீரே ஆறாகவும், ஊற்றாகவும் அமைந்து ஊருணியும் நிறைந்து உணவாகவும் மாறுகின்றது.

சுருக்கமா சொல்லனும் அப்படின்னா உயிர்களின் தோற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் மழைதான் காரணம்.

ஓ...

குறிப்பாக சொல்லனும்ன்னா மழை நீரே உணவாகவும் அமைகின்றது.

மழைநீர் உணவாக அமையுதா... அது எப்படி அம்மா...

நம்ம வீட்ல சாப்பாடு இருக்குடா அமுதன். அதுனால சாப்பிடுறோம். 

ஆனா அந்த சாப்பாடு கூடாத கிடைக்காதவங்க நிறைய பேர் இருக்காங்கப்பா. அவுங்களுக்கு தண்ணீர் தான் உணவே...

ரொம்ப பாவம்ல அம்மா அவங்க எல்லாம்..

ஆமாப்பா.. அதுனால தான் நீ சாப்பாட வேஸ்ட் பண்ணும் போது அம்மா உன்கிட்ட கோவிச்சுக்குவேன்.

சாரி அம்மா... இனிமேல் நான் சாப்பாட வேஸ்ட் பண்ண மாட்டேன்.

இந்த மழையின் சிறப்பைத் தான் திருவள்ளுவர், திருக்குறள்ல "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை", ன்னு சொல்லி இருக்காங்க.

காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



Thursday, October 22, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 11

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


பொருள்:

உலகத்தில் உள்ள உயிர்களை எல்லாம் வாழ வைப்பதால், மழையை அமிர்தம் என்றே கருத வேண்டும். 


கதை:

ஐயோ...இந்த மழை ஏன் தான் வருதோ தெரியலை... அமுதன் வருத்தப்பட.

அமுதா அப்படி சொல்லக்கூடாது என்று அவனது தாய் கூறினால்.

ஆனால் அம்மா, இந்த மழை என்னோட யூனிபார்ம் டிரஸ், Shoes, books, எல்லாத்தையும் நனைச்சிடுச்சு.

சரியா போச்சு... உனக்கு ஸ்கூல்ல உங்க மிஸ் மழை பத்தியெல்லாம் சொல்லிக் கொடுக்கலையா...

மழையை பற்றி தெரிஞ்சுக்க என்ன இருக்குது....

நான் நினைச்சது சரிதான். உனக்கு மழையை பற்றி நான் தான் கிளாஸ் எடுக்கனும்...

நீ படிக்குற ஸ்கூல்ல தமிழ் Subject இருக்குல்ல....

ஆமா,ஆமா, இருக்கு...

அதுல திருக்குறள் உண்டா...

அய்யோ..அம்மா தப்பித்தவறி திருக்குறள் மட்டும் சொல்லிடாத...

அத மனப்பாட பகுதின்னு வச்சு Exam-ல கொலையா கொல்லுறாங்க.

இதுலாம் போதாதுன்னு திருக்குறள் Competition வச்சு Price கொடுக்குறாங்க.... 

கண்ணா திருக்குறள் நீ நினைக்குற மாதிரி கஷ்டம் இல்லைப்பா.. அதுல திருவள்ளுவர் என்ன சொல்லுறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டா Easy தான்...

சொல்லுங்க..கேட்குறேன்...

மனிதன் வாழ அத்தியாவசியமானது எது?

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம்...

நீ சாப்பிடும் போது விக்கல் வந்தா என்ன பண்ணுவ?

தண்ணி குடிப்பேன்.

அந்த தண்ணீர் எங்க இருந்து வருது?..

பூமிக்கு அடியில் இருந்து...

அந்த பூமிக்கு அடியில தண்ணீர் எப்படி போச்சு....

அது வந்தும்மா......

சரி மழை அப்படின்னா என்ன?.

ம்ம்ம்... வானத்துல இருந்து பூமிக்கு வர்ற தண்ணீர் தான் மழை..

இப்போ புரியுதா.. பூமிக்கு அடியில தண்ணீர் எப்படி போச்சுன்னு...

ம்ம்ம்ம்...

மழைன்னா தண்ணீர். தண்ணீர் யாருக்கு எல்லாம் தேவை..

ம்ம்ம்ம்.... எல்லா உயிரினமும் உயிர் வாழ தண்ணீர் தேவை.

ஆமாப்பா.... அதே மாதிரி பூமியில விழுகுற தண்ணீர் பூமியின் சூட்டு நிலையை சமப்படுத்துகின்றது....

ஓ.... இவ்வளவு நன்மைகள் இருக்குதா மழையில்...

ஆமாம் அமுதா... மழை இல்லாவிட்டால் மக்கள் இல்லை....

அதுனால தான் திருவள்ளுவர் வான் சிறப்பு அதிகாரத்தில் முதல் திருக்குறள்ல மழையை அமிர்தம்ன்னு சொல்லி இருக்காங்க ..... 

இப்போதாம்மா எனக்கு அந்த திருக்குறள் புரியுது....

இது மாதிரி மழையை பற்றி நிறைய இருக்கு அமுதா...  டெய்லி ஒண்ணு ஒண்ணா சொல்லுறேன்....


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.